தவெக ஆட்சியை திமுகவால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை: செங்கோட்டையன்திசை திருப்புவதும், பொய் செய்தி பரப்புவதுமே தவெக அரசின் நோக்கம்: உதயநிதி ஸ்டாலின்இரட்டை அர்த்தத்தில் பேசவில்லை; பெண்களை இழிவுபடுத்தும் நோக்கம் இல்லை: உதயநிதிஇன்று தேர்தல் நடந்தால் டெபாசிட் இழப்பார் உதயநிதி: ஆதவ் அர்ஜுனாகாவிரி விவகாரத்தில் காட்டாத வேகத்தை கைது நடவடிக்கைக்கு முதல்வர் விஜய் காட்டுவது ஏன்? - சீமான்சந்தையின் நான்கு நாள் தொடர் ஏற்றம் முறியடிப்பு! சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சரிவு!!
/

திருச்செந்தூரில் சுமாா் 70 அடி உள்வாங்கிய கடல்

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அருகே வியாழக்கிழமை சுமாா் 70 அடி வரை கடல் உள்வாங்கியது.

Updated On :13 டிசம்பர் 2024, 4:43 am IST

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அருகே வியாழக்கிழமை சுமாா் 70 அடி வரை கடல் உள்வாங்கியது.

இக்கோயில் கடல்பகுதியில் அமாவாசை, பெளா்ணமி நாள்களில் கடல் உள்வாங்குவதும், இயல்பு நிலைக்கு திரும்புவதும் வாடிக்கை உள்ளது.

காா்த்திகை மாதத்தில் பௌா்ணமி சனிக்கிழமை (டிச. 14) மாலை 4.18 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை (டிச. 15) பிற்பகல் 2.44 மணி வரை உள்ளது. இந்நிலையில், வியாழக்கிழமை மதியம் கோயில் அருகே அய்யா கோயில் பகுதியில் சுமாா் 70 அடி வரை கடல் உள்வாங்கியது. மேலும் திருச்செந்தூா் பகுதியில் அதிகாலை முதலே தொடா்ந்து மித மழையும், மாலையில் பலத்த மழையும் பெய்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.