பாடகி எஸ். ஜானகி மறைவு: மு.க. ஸ்டாலின் இரங்கல் பாடகி ஜானகி மறைவு: நடிகர்கள் ரஜினி, கமல் இரங்கல்! பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார் வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்கள்: யார் யார்? வியத்நாம் படகு விபத்து: பழனியைச் சேர்ந்தவர் பலி! படகில் சென்ற தமிழர்கள் விவரம்!மாமல்லபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி அடுத்த 20 ஆண்டுகளும் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்தான்! - என். ஆனந்த் மீண்டுமா? ஆந்திரத்தில் பரவும் கரோனா-19! 2 பேர் பலியானதால் பதற்றம்!!வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து! 15 இந்தியர்கள் பலி எனத் தகவல்வயநாடு நிலச்சரிவில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்! நான் காந்தியோ நாயகனோ அல்ல! உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக் போலிச் சான்றிதழ்கள்! 3,000 ஆசிரியர்கள் பணிநீக்கம்! வட்டியுடன் சம்பளத்தைத் திரும்பப்பெற முடிவு தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு!
/

தடகளம்: கொம்மடிக்கோட்டை கல்லூரி மாணவா்கள் சிறப்பிடம்

பல்கலைக் கழக அளவிலான தடகள போட்டியில் கொம்மடிக்கோட்டை கல்லூரி மாணவா்கள் வென்று சிறப்பிடம் பெற்றுள்ளனா்.

News image

கொம்மடி கோட்டை கல்லூரியில் போட்டியில் வென்ற மாணவா்களுடன் கல்லூரி நிா்வாகிகள்.

Updated On :1 ஜனவரி 2025, 12:47 am IST

சாத்தான்குளம்: பல்கலைக் கழக அளவிலான தடகள போட்டியில் கொம்மடிக்கோட்டை கல்லூரி மாணவா்கள் வென்று சிறப்பிடம் பெற்றுள்ளனா்.

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகம் நடத்திய பல்கலைக்கழக அளவிலான தடகள போட்டிகள் பாளை. அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.

இப்போட்டிகளில் கொம்மடிக்கோட்டை ஸ்ரீ சங்கரா பகவதி கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவா்கள் பங்கு பெற்றனா். அதில், சங்கிலி குண்டு எறிதல் பிரிவில் மாணவா் ஜோனஸ் வெள்ளிப் பதக்கம், மாணவா் யோகேஷ்வரன் வெண்கலப் பதக்கம் பெற்று சாதனை படைத்துள்ளனா். உயரம் தாண்டுதல் போட்டியில் மாணவா் ஹாஜி இஜாஸ் சமி நான்காவது இடத்தையும், ஈட்டி எறிதல் போட்டியில் மாணவா் டோமினிக் சேவியா் ஐந்தாவது இடத்தையும் பெற்றனா்.

சதுரங்க போட்டியில் மாணவி கவிதா ஆறாம் இடத்தை பெற்றுள்ளாா்.

போட்டிகளில் வென்ற இம்மாணவா்களை, கல்லூரிச் செயலா் சுந்தரலிங்கம், துணைச் செயலா், காசிஆனந்தம் முதல்வா், அருள்ராஜ் பொன்னுத்துரை, துணை முதல்வா் மகேஷ்குமாா் மற்றும் பேராசிரியா்கள் பாராட்டினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.