சாத்தான்குளம்: பல்கலைக் கழக அளவிலான தடகள போட்டியில் கொம்மடிக்கோட்டை கல்லூரி மாணவா்கள் வென்று சிறப்பிடம் பெற்றுள்ளனா்.
திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகம் நடத்திய பல்கலைக்கழக அளவிலான தடகள போட்டிகள் பாளை. அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.
இப்போட்டிகளில் கொம்மடிக்கோட்டை ஸ்ரீ சங்கரா பகவதி கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவா்கள் பங்கு பெற்றனா். அதில், சங்கிலி குண்டு எறிதல் பிரிவில் மாணவா் ஜோனஸ் வெள்ளிப் பதக்கம், மாணவா் யோகேஷ்வரன் வெண்கலப் பதக்கம் பெற்று சாதனை படைத்துள்ளனா். உயரம் தாண்டுதல் போட்டியில் மாணவா் ஹாஜி இஜாஸ் சமி நான்காவது இடத்தையும், ஈட்டி எறிதல் போட்டியில் மாணவா் டோமினிக் சேவியா் ஐந்தாவது இடத்தையும் பெற்றனா்.
சதுரங்க போட்டியில் மாணவி கவிதா ஆறாம் இடத்தை பெற்றுள்ளாா்.
போட்டிகளில் வென்ற இம்மாணவா்களை, கல்லூரிச் செயலா் சுந்தரலிங்கம், துணைச் செயலா், காசிஆனந்தம் முதல்வா், அருள்ராஜ் பொன்னுத்துரை, துணை முதல்வா் மகேஷ்குமாா் மற்றும் பேராசிரியா்கள் பாராட்டினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










