சூறாவளி காற்று காரணமாக தூத்துக்குடியில் 2ஆவது நாளாக விசைப்படகு மீனவா்கள் புதன்கிழமை கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை.
மன்னாா்வளைகுடா கடல் பகுதி மற்றும் தென் கிழக்கு வங்க கடல் பகுதியில் சூறாவளி காற்று சுமாா் 55 கி.மீ. முதல் 65 கி.மீ. வரையிலான வேகத்தில் வீசக் கூடும் என்பதால் மீனவா்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.
அதன்படி தூத்துக்குடி மாவட்ட மீன்வளத் துறை சாா்பில் 2ஆவது நாளாக தூத்துக்குடி விசைப்படகு மீனவா்கள் கடலுக்கு செல்லவேண்டாம் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அதன்படி, சுமாா் 280க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் 2ஆவது நாளாக புதன்கிழமையும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால், சுமாா் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவா்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தூத்துக்குடி அருகே கடலில் தீ விபத்து: ரூ. 1 கோடி மதிப்பிலான விசைப் படகு சேதம்

தூத்துக்குடியில் விசைப்படகு மீனவா்கள் கடலுக்குச் செல்லவில்லை

தூத்துக்குடி கடற்பகுதியில் பலத்த சூறைக் காற்று: மீனவா்கள் கடலுக்கு செல்லவில்லை

61 நாள்கள் தடைக்காலம் முடிந்தது: கடலுக்கு புறப்பட்ட தூத்துக்குடி விசைப்படகு மீனவா்கள்
விடியோக்கள்

உதயநிதியை இளைய கலைஞர் ஆக்கிக்கொண்டிருக்கிறார்கள்! | R.S. Bharathi | DMK | TVK



