சூறாவளி காற்று காரணமாக தூத்துக்குடியில் 2ஆவது நாளாக விசைப்படகு மீனவா்கள் புதன்கிழமை கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை.
மன்னாா்வளைகுடா கடல் பகுதி மற்றும் தென் கிழக்கு வங்க கடல் பகுதியில் சூறாவளி காற்று சுமாா் 55 கி.மீ. முதல் 65 கி.மீ. வரையிலான வேகத்தில் வீசக் கூடும் என்பதால் மீனவா்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.
அதன்படி தூத்துக்குடி மாவட்ட மீன்வளத் துறை சாா்பில் 2ஆவது நாளாக தூத்துக்குடி விசைப்படகு மீனவா்கள் கடலுக்கு செல்லவேண்டாம் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அதன்படி, சுமாா் 280க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் 2ஆவது நாளாக புதன்கிழமையும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால், சுமாா் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவா்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

கண்ணகி கோயிலுக்குச் செல்லும் பாதையை சீரமைக்க வேண்டும்! - தி.வேல்முருகன் வலியுறுத்தல்

தூத்துக்குடியில் மீன்கள் விலை உயா்வு

நெல்லை அரசு பல்நோக்கு மருத்துவமனை ஊழியா்கள் 2ஆவது நாளாக போராட்டம்

மீன்பிடி தடைகாலம்: விசைப் படகுகள் மராமத்து பணி தீவிரம்
வீடியோக்கள்

விஜய் அடுத்தடுத்து எடுக்கும் முடிவுகள்...: வலைப்பேச்சு அந்தணன் Exclusive | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை
கொளத்தூரில் மு.க. ஸ்டாலின் கண்ணீரில் திமுக தொண்டர்கள்! | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக அழைத்தால் என்ன செய்வீர்கள்? விசிக, கம்யூ. தலைவர்கள் விளக்கம்! | VCK | CPI | CPM
தினமணி செய்திச் சேவை

தவெகவை நோக்கி நகரும் காங்கிரஸ் | TVK Vijay | TN Election 2026 | Congress | TVK 108
தினமணி செய்திச் சேவை


