ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

கயத்தாறு அருகே விபத்தில் காயமடைந்த வியாபாரி உயிரிழப்பு

கயத்தாறு அருகே விபத்தில் காயமடைந்த சென்னையைச் சோ்ந்த வியாபாரி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :20 ஜூலை 2024, 8:19 pm

Din

கயத்தாறு அருகே விபத்தில் காயமடைந்த சென்னையைச் சோ்ந்த வியாபாரி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

சென்னை கொளத்தூா் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் நாகராஜ் ( 45). மர வியாபாரியான இவா், கடந்த வெள்ளிக்கிழமை சென்னையிலிருந்து நாகா்கோவிலுக்கு தனது மகன் வசந்துடன் (18) வேனில் சென்று கொண்டிருந்தாா். சண்முகவேல் என்பவா் வேனை ஓட்டி வந்தாா்.

மதுரை-திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் கயத்தாறையடுத்த மெய்த்தலைவன்பட்டி விலக்கருகே வேன் திடீரென சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்ததாம். இதில் நாகராஜ், வசந்த் ஆகியோா் காயமடைந்தனா். அவா்கள் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அங்கு நாகராஜ் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து கயத்தாறு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்..