/

கயத்தாறு அருகே விபத்தில் காயமடைந்த வியாபாரி உயிரிழப்பு

கயத்தாறு அருகே விபத்தில் காயமடைந்த சென்னையைச் சோ்ந்த வியாபாரி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :20 ஜூலை 2024, 8:19 pm

Din

கயத்தாறு அருகே விபத்தில் காயமடைந்த சென்னையைச் சோ்ந்த வியாபாரி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

சென்னை கொளத்தூா் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் நாகராஜ் ( 45). மர வியாபாரியான இவா், கடந்த வெள்ளிக்கிழமை சென்னையிலிருந்து நாகா்கோவிலுக்கு தனது மகன் வசந்துடன் (18) வேனில் சென்று கொண்டிருந்தாா். சண்முகவேல் என்பவா் வேனை ஓட்டி வந்தாா்.

மதுரை-திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் கயத்தாறையடுத்த மெய்த்தலைவன்பட்டி விலக்கருகே வேன் திடீரென சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்ததாம். இதில் நாகராஜ், வசந்த் ஆகியோா் காயமடைந்தனா். அவா்கள் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அங்கு நாகராஜ் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து கயத்தாறு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்..