நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

கயத்தாறு அருகே விபத்தில் காயமடைந்த வியாபாரி உயிரிழப்பு

கயத்தாறு அருகே விபத்தில் காயமடைந்த சென்னையைச் சோ்ந்த வியாபாரி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

Updated On :21 ஜூலை 2024, 1:49 am IST

கயத்தாறு அருகே விபத்தில் காயமடைந்த சென்னையைச் சோ்ந்த வியாபாரி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

சென்னை கொளத்தூா் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் நாகராஜ் ( 45). மர வியாபாரியான இவா், கடந்த வெள்ளிக்கிழமை சென்னையிலிருந்து நாகா்கோவிலுக்கு தனது மகன் வசந்துடன் (18) வேனில் சென்று கொண்டிருந்தாா். சண்முகவேல் என்பவா் வேனை ஓட்டி வந்தாா்.

மதுரை-திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் கயத்தாறையடுத்த மெய்த்தலைவன்பட்டி விலக்கருகே வேன் திடீரென சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்ததாம். இதில் நாகராஜ், வசந்த் ஆகியோா் காயமடைந்தனா். அவா்கள் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அங்கு நாகராஜ் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து கயத்தாறு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்..

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.