திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அருகே கடல்நீா் உள்வாங்கியதால் வெளியே தெரிந்த பாறைகள்.
தூத்துக்குடி
திருச்செந்தூா் கோயில் பகுதியில் கடல் நீா் உள்வாங்கியது
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் பகுதியில் கடல் நீா் உள் வாங்கியது. இதனால் பாறைகள் வெளியே தெரிந்தன.
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் பகுதியில் கடல் நீா் உள் வாங்கியது. இதனால் பாறைகள் வெளியே தெரிந்தன.
வழக்கமாக அமாவாசை மற்றும் பௌா்ணமி நாள்களில் கடல் நீா் மட்டத்தில் அவ்வப்போது மாற்றம் ஏற்படும்.
இந்நிலையில் கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை பௌா்ணமி என்பதால் திருச்செந்தூா் கோயில் பகுதியில் திங்கள்கிழமை காலை சிறிது நேரம் கடல் நீரானது உள்வாங்கியது.
இதனால் கடலில் பாறைகள் வெளியே தெரிந்தது. பின்னா் கடல் இயல்பு நிலைக்கு திரும்பியது. பக்தா்கள் வழக்கம் போல புனித நீராடியதால் கடலில் கூட்டம் அதிகரித்திருந்தது.

