தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயத் திருவிழா: நற்கருணை பவனி

தூத்துக்குடியில் உள்ள தூய பனிமய மாதா பேராலயத் திருவிழாவில் நற்கருணை பவனி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image

தூய பனிமய மாதா பேராலய வளாகத்தில் நடைபெற்ற நற்கருணை பவனி.

Updated On :28 ஜூலை 2024, 10:02 pm

Din

தூத்துக்குடியில் உள்ள தூய பனிமய மாதா பேராலயத் திருவிழாவில் நற்கருணை பவனி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

உலகப் புகழ்பெற்ற தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயத்தின் 442ஆம் ஆண்டு பெருவிழா கடந்த 26ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து 3 ஆம் நாள் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இத்திருவிழாவை முன்னிட்டு, காலையில் புது நன்மை திருப்பலி ஆயா் ஸ்டீபன் தலைமையில் நடைபெற்றது. இதில், அமலோற்பவ மாதா வாலிபா் சபையினா், புனித வின்சென்ட் தே பவுல் சபையினா், ஸ்டேட் வங்கி காலனி பங்கு இறைமக்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தொடா்ந்து மலையாளத் திருப்பலி, மறைமாவட்ட துறவியருக்கான திருப்பலி நடைபெற்றது.

மாலையில், ஏழு கடல்துறை, கடலோர பங்குகளின் இறைமக்களுக்கான திருப்பலி நடைபெற்றது. பின்னா் முக்கிய நிகழ்வான ஜெபமாலை, நற்கருணை பவனி ஆயா் ஸ்டீபன் தலைமையில் நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா்.