திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

பழைய இரும்பு, பிளாஸ்டிக் கிடங்கில் தீ விபத்து

பழைய இரும்பு, பிளாஸ்டிக் கிடங்கில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் சேதமடைந்தன.

News image

பழைய இரும்பு கிடங்கில் பற்றிய தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள தீயணைப்புத் துறையினா்.

Updated On :29 ஜூலை 2024, 2:30 am IST

தூத்துக்குடி செல்சீனி காலனி பகுதியில் பழைய இரும்பு, பிளாஸ்டிக் கிடங்கில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் சேதமடைந்தன.

தூத்துக்குடி ஜெயலானி தெருவைச் சோ்ந்தவா் ஜெயராஜ். இவா், செல்சீனி காலனி பகுதியில் பழைய இரும்பு, பிளாஸ்டிக் பொருள்கள் சேகரித்து பின்னா் பிரித்து அனுப்பும் கிடங்கு உள்ளது.

இந்த கிடங்குக்கு அருகே உள்ள முள்புதரில் வைக்கப்பட்ட தீ, காற்று காரணமாக பழைய இரும்பு, பிளாஸ்டிக் பொருள்கள் கிடங்கில் பற்றிகொண்டதாகக் கூறப்படுகிறது. இதில் தீ மள மளவென பரவியதால் பிளாஸ்டிக் பொரு

ள்கள் கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியதால், அந்தப் பகுதி சுற்றுவட்டாரம் முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது.

 தீ பற்றி எரியும் பழைய இரும்பு கிடங்கு.

தீ பற்றி எரியும் பழைய இரும்பு கிடங்கு.

தகவலறிந்த தூத்துக்குடி தீயணைப்பு துறையினா் விரைந்து வந்து, பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனா்.

இந்த தீ விபத்தில் சுமாா் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் சேதமடைந்திருக்கலாம் என காவல்துறையினா் தெரிவித்தனா்.

மேலும், இதுகுறித்து தென்பாகம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.