நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

தூத்துக்குடி அனல் மின்நிலைய 2-ஆவது அலகில் உற்பத்தி நிறுத்தம்

தூத்துக்குடி அனல் மின்நிலைய 2-ஆவது அலகு 45 நாட்கள் நிறுத்தம்

News image

கோப்புப் படம்

Updated On :29 ஜூன் 2024, 6:37 pm

DIN

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் பராமரிப்பு பணி காரணமாக 2-ஆவது அலகில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.

தூத்துக்குடியில் தமிழக அரசின் அனல் மின் நிலையம் இயங்கி வருகிறது. இங்குள்ள 5 அலகுகளில் தலா 210 மெகாவாட் வீதம் மொத்தம் 1050 மெகாவாட் மின்சாரம் தினமும் உற்பத்தி செய்யப்படுகிறது.

தற்போது காற்றாலைகள் மூலம் மின்சாரம் உற்பத்தி அதிகரித்துள்ளதையடுத்து, பராமரிப்பு பணிக்காக அனல் மின்நிலையத்தின்

2-ஆவது அலகு மட்டும் 45 நாள்களுக்கு உற்பத்தி நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக அனல் மின்நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.