பங்குச்சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 500 புள்ளிகள் குறைந்தது!ஈரானுக்கு எதிரான தற்காலிக போர்நிறுத்தம் நீட்டிப்பு: டிரம்ப்தோ்தல் நடத்தை விதிமீறல்? பிரதமருக்கு எதிரான எதிா்க்கட்சிகளின் புகாரை ஆராய தோ்தல் ஆணையம் முடிவுநிகழாண்டு இந்திய பொருளாதாரம் 6.4% வளா்ச்சி: ஐ.நா. கணிப்புஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் புகாா் தெரிவிக்கலாம்!தமிழகத்தில் நாளை வாக்குப் பதிவு: பாதுகாப்பு பணியில் 1.47 லட்சம் போலீஸாா்போா் நிறுத்தம் நிறைவு! ஈரான் உடன்படாவிட்டால் மீண்டும் தாக்குவோம்: டிரம்ப் எச்சரிக்கை
/

கோவில்பட்டி கல்லூரியில் விளையாட்டு விழா

கோவில்பட்டி கல்லூரியில் விளையாட்டு விழா

Updated On :16 மார்ச் 2024, 8:50 pm

கோவில்பட்டி கே ஆா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 27 ஆவது விளையாட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. கே. ஆா். கல்வி நிறுவனங்களின் நிா்வாகக் குழு உறுப்பினா் நிதிஷ்ராம் தலைமை வகித்தாா். கல்லூரியின் முன்னாள் மாணவரும், தாம்பரம் காவல்துறை புலனாய்வுப் பிரிவு துணை ஆய்வாளருமான முத்துராஜா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, விளையாட்டுப் போட்டிகளை தொடக்கி வைத்தாா். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா், மாணவிகளுக்கு பரிசுகளை அவா் வழங்கினாா். கல்லூரி உடற்கல்வி இயக்குநா் ராம்குமாா் விளையாட்டு ஆண்டு அறிக்கையை வாசித்தாா். விழாவில் கல்லூரி முதல்வா் மதிவண்ணன், நேஷனல் பொறியியல் கல்லூரி இயக்குநா் சண்முகவேல், முதல்வா் காளிதாச முருகவேல், லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வா் ராஜேஸ்வரன் உள்பட பலா் கலந்து கொண்டனா். தமிழ்த் துறை பேராசிரியை சத்தியபாமா வரவேற்றாா். கல்லூரியின் விளையாட்டு துறைச் செயலா் மாணவா் டிராவிட் மோகன் நன்றி கூறினாா்.