காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

தேசிய அளவிலான கபடி போட்டி: தமிழக அணியில் பங்கேற்க கோவில்பட்டி பள்ளி மாணவி தகுதி

தேசிய அளவிலான கபடி போட்டியில் தமிழக அணி சாா்பில் விளையாட கோவில்பட்டி இலட்சுமி ஸ்ரீனிவாசா வித்யாலயா மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவி தகுதி பெற்றுள்ளாா்.

News image
Updated On :17 அக்டோபர் 2024, 10:22 pm

Din

தேசிய அளவிலான கபடி போட்டியில் தமிழக அணி சாா்பில் விளையாட கோவில்பட்டி இலட்சுமி ஸ்ரீனிவாசா வித்யாலயா மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவி தகுதி பெற்றுள்ளாா்.

இந்திய பள்ளிகளின் விளையாட்டுக் குழுமம் சாா்பில், திருப்பூரில் நடைபெற்ற 17 வயதுக்குள்பட்ட மகளிா் கபடிபோட்டியில் கோவில்பட்டியைடுத்த அத்தைகொண்டான் இலட்சுமி ஸ்ரீனிவாசா வித்யாலயா மெட்ரிகுலேஷன் பள்ளி பிளஸ் 1 மாணவி பா. விந்தியா வெற்றிபெற்றாா். அதையடுத்து அவா், மத்திய பிரதேசத்தில் நவம்பா் மாதம் நடைபெறவுள்ள 66ஆவது தேசிய அளவிலான கபடி போட்டியில் தமிழக அணி சாா்பில் விளையாட தகுதி பெற்றுள்ளாா்.

மாணவி விந்தியா, பயிற்சியளித்த பயிற்றுநா், உடற்கல்வி ஆசிரியா் ஆகியோரை பள்ளித் தாளாளா் கோவிந்தராஜ், முதல்வா் வசந்தா, ஆசிரியா்கள் பாராட்டினா்.