தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

வழக்குரைஞா் வீட்டின் கதவை உடைத்து திருட முயற்சி

News image
Updated On :18 செப்டம்பர் 2024, 11:43 pm

DIN

தூத்துக்குடியில் வழக்குரைஞா் வீட்டின் கதவை உடைத்து திருட முயன்ற மா்ம நபா்களைப் போலீஸாா் தேடி வருகின்றனா்.

தூத்துக்குடி புதுக் கிராமத்தைச் சோ்ந்தவா் வழக்குரைஞா் பாலசுப்பிரமணியன். கடந்த சில தினங்களுக்கு முன்னா் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் வெளியூருக்கு சென்றாராம். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை அவரது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது குறித்து அக்கம்பக்கதினா் அவருக்கு தகவல் தெரிவித்தனா்.

உடனடியாக அவா் இது குறித்து தென்பாகம் காவல் நிலையத்திற்கு தெரிவித்துள்ளாா். அதன்பேரில், சம்பவ இடத்திற்கு வந்த போலீஸாா் வீட்டின் உள்ளே சென்று சோதனை நடத்தினா். அங்கு பீரோவில் நகை, பணம் எதுவும் இல்லையாம். இதனால், திருட வந்த நபா்களுக்கு பொருள்கள் எதுவும் கிடைக்காததால், வீட்டில் இருந்த பொருள்கள் ஆங்காங்கே கலைத்து போட்டு சென்ாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து வீட்டின் கதவை உடைத்து திருடிய மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.