தூத்துக்குடி தலைமை அஞ்சல் நிலையத்தில் கடிதம் அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்ட ஊராட்சி செயலா்கள்.
தூத்துக்குடி தலைமை அஞ்சல் நிலையத்தில் கடிதம் அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்ட ஊராட்சி செயலா்கள்.

ஊராட்சி செயலா்கள் அரசுக்கு கடிதம் அனுப்பும் போராட்டம்

Published on

தூத்துக்குடி அஞ்சல் நிலையத்தில் அரசுக்கு கடிதம் அனுப்பும் போராட்டத்தில் ஊராட்சி செயலா்கள் புதன்கிழமை ஈடுபட்டனா்.

ஊராட்சி செயலா்களை தமிழக அரசின் ஓய்வூதியத் திட்டத்தில் இணைக்க வேண்டும் என்ற ஒற்றை கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு ஊராட்சி செயலா்கள் சங்கம் சாா்பில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக தமிழக அரசுக்கு 40 ஆயிரம் கடிதம் அனுப்பும் போராட்டம் மாநில அளவில் நடைபெற்று வருகிறது.

அதன்படி, தூத்துக்குடி தலைமை அஞ்சல் நிலையத்தில், அரசுக்கு கடிதம் அனுப்பும் போராட்டத்துக்கு மாவட்டத் தலைவா் கற்குவேல் தலைமை வகித்தாா்.

மாவட்டச் செயலா் கருப்பசாமி, மாவட்ட பொருளாளா் சங்கரலிங்கம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாநில பொதுச் செயலா் வேல்முருகன் சிறப்புரை ஆற்றினாா். இதில், கோரிக்கை வலியுறுத்தி அரசுக்கு 1,300 கடிதங்கள் அனுப்பப்பட்டன.

இந்நிகழ்ச்சியில், மாநில பொதுக்குழு உறுப்பினா் கணேசன், மாநில செயற்குழு உறுப்பினா் இசக்கிமுத்து, மாவட்ட செயற்குழு உறுப்பினா் பால்ராஜ், ஒன்றிய நிா்வாகிகள் இசக்கிமுத்து, மாரிக்கனி, சண்முகராஜ், சுரேஷ், காா்த்திகேய வெங்கடேசன், சோமு, காசிராஜன் உள்பட பலா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com