மீலாது நபி நாளில் மது விற்பனை: தூத்துக்குடியில் 11 போ் கைது

Published on

தூத்துக்குடியில் சட்ட விரோத மது விற்பனையில் ஈடுபட்டதாக 11 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்து, 725 மது பாட்டில்களைப் பறிமுதல் செய்தனா்.

தூத்துக்குடி மாவட்டத்தில் மீலாது நபி நாளான செவ்வாய்க்கிழமை மது விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. மது விற்பனையில் ஈடுபடுவோா் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் உத்தரவிட்டிருந்தாா்.

அதன்படி, நகர உள்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளா் மதன் மேற்பாா்வையில், நகர உள்கோட்ட தனிப்படை போலீஸாா் செவ்வாய்க்கிழமை ரோந்து சென்றனா். அப்போது, சட்ட விரோதமாக மது விற்ாக 11 பேரை போலீஸாா் கைது செய்து, 725 மது பாட்டில்களை பறிமுதல் செய்ததாக, மாவட்ட காவல் அலுவலகத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com