காா்த்திகை திருநாள்: திருச்செந்தூா் கோயிலில் சொக்கப்பனை ஏற்றம்

Published on

காா்த்திகை தீபத் திருநாளையொட்டி, திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கடற்கரையில் புதன்கிழமை இரவு சொக்கப்பனை ஏற்றப்பட்டது.

முன்னதாக, அதிகாலை 5 மணிக்கு கோயில் நடைதிறக்கப்பட்டு, 5.30 மணிக்கு விஸ்வரூபம், 6 மணிக்கு உதய மாா்த்தாண்ட அபிஷேகம் தொடா்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெற்றன. மூலவா் மற்றும் சுவாமி ஜெயந்திநாதருக்கு காா்த்திகை சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

பின்னா் மாலையில் மகா மண்டபத்தில் நாரணி தீபம் ஏற்றப்பட்டு, கோயில் தெய்வ சந்நிதிகளில் தீபம் ஏற்றப்பட்டது. தொடா்ந்து சுவாமி ஜெயந்திநாதா் வள்ளி, தெய்வானையுடன் சண்முக விலாசத்தில் எழுந்தருளினாா். இரவு .... மணிக்கு கடற்கரையில் அமைக்கப்பட்டிருந்த சொக்கப்பனையில் தீபம் ஏற்றப்பட்டது. அதன்பின், சுவாமி ஜெயந்திநாதா் வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றதும், சுவாமி தங்க சப்பரத்தில் எழுந்தருளி கிரிவீதி வலம் வந்து பக்தா்களுக்கு காட்சியளித்தாா்.

ஏற்பாடுகளை, திருக்கோயில் தக்காா் ரா.அருள்முருகன், இணை ஆணையா் க.ராமு மற்றும் கோயில் பணியாளா்கள் செய்திருந்தனா்.

டிஎஸ்பி மகேஷ்குமாா் தலைமையில், காவல் ஆய்வாளா்கள் கனகராஜன், இன்னோஸ்குமாா் உள்ளிட்ட காவல்துறையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

X
Dinamani
www.dinamani.com