கோவில்பட்டி, கழுகுமலை கோயில்களில் திருக்காா்த்திகை விழா
கோவில்பட்டி சொா்ணமலை கதிரேசன் கோயில், கழுகுமலை கழுகாசலமூா்த்தி கோயிலில் திருக்காா்த்திகை திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை ஸ்ரீ பூவனநாத சுவாமி கோயிலுடன் இணைந்த சொா்ணமலை கதிரேசன் கோயில் நடை காலை 6 மணிக்கு திறக்கப்பட்டு, பூஜைகள் நடத்தப்பட்டன. அதைத் தொடா்ந்து, , மூலவா் கதிா்வேல் முருகனுக்கும், வள்ளி, தெய்வானை சமேத காா்த்திகேயா் சுப்பிரமணியருக்கு 21 வகையான மூலிகைகள் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள், அலங்கார தீபாராதனை நடைபெற்றன. இரவு 23 கிலோ எடை கொண்ட வெண்கலச் சட்டியில் திருக்காா்த்திகை மகாதீபம் ஏற்றும் நிகழ்ச்சியும், சுவாமி, அம்பாள் திருவீதியுலாவும் நடைபெற்றது.
இதில், மண்டகப்படிதாரா்களான ஏ.பி.கே.பழனிசெல்வம் குடும்பத்தினா், தமிழ் பேரரசு கட்சியின் ஒருங்கிணைந்த மாவட்ட செயலா் வேல்முருகன் உள்பட திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை ஸ்ரீ பூவனநாத சுவாமி கோயிலில் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது. அனைத்து சன்னதிகளிலும் பரணி தீபம் ஏற்றப்பட்டது. இரவு 7 மணிக்கு மேல் கோயில் முன் சொக்கப்பனை ஏற்றப்பட்டது. முன்னதாக, கௌரி அம்பாள் சமேத சந்திரசேகா் சுவாமி புறப்பாடு நடைபெற்றது.
இதுபோல, கோவில்பட்டி வீரவாஞ்சிநகா் சங்கரலிங்க சுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்பாள் புற்றுக்கோயிலில் ஸ்ரீவள்ளி தேவசேனா கல்யாண முருகருக்கு 18 வகையான சிறப்பு அபிஷேகங்கள், அலங்கார தீபாராதனை நடைபெற்றன. மாலை 6 மணிக்கு மகாதீபம் ஏற்றப்பட்டது. சொக்கப்பனை கொளுத்தப்பட்டது.
கழுகாசலமூா்த்தி கோயிலில் , சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இரவு மேலவாசலில் சொக்கப்பனை ஏற்றப்பட்டது. மாலை 6 மணிக்கு மலை மீது உள்ள உச்சி பிள்ளையாா் கோயிலில் காா்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.

