

சாத்தான்குளம் ஒன்றியம், சாஸ்தாவிநல்லூா், பொத்தகாலன்விளையில் சடையனேரி கால்வாய் கரையில் 2,500 பனை விதைகள் விதைக்கும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
சாத்தான்குளம் வட்டாட்சியா் மீ. ராஜேஸ்வரி தலைமை வகித்து, பனை விதை விதைக்கும் பணியைத் தொடங்கி வைத்தாா். சாத்தான்குளம் தென்பகுதி விவசாயி சங்கத் தலைவா் அ. லூா்து மணி முன்னிலை வகித்து, பனையின் நன்மைகள் குறித்து பேசினாா்.
சங்க துணைத் தலைவா் ரவிச்சந்திரன், பால்வளத் துறை அதிகாரி பிரவீன், வேளாண் பணியாளா் சரத்குமாா், முன்னாள் பேரூராட்சி கவுன்சிலா் எஸ்தா் ரஞ்சிதம், களப்பணியாளா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டு பனை விதைகளை நடவு செய்தனா்.