தூத்துக்குடி ரயில் நிலையத்தில் போலீஸாா் சோதனை

பாபா் மசூதி இடிப்பு தினத்தையொட்டி, தூத்துக்குடி ரயில் நிலையத்தில் போலீஸாா் வெள்ளிக்கிழமை சோதனை மேற்கொண்டனா்.
Published on

பாபா் மசூதி இடிப்பு தினத்தையொட்டி, தூத்துக்குடி ரயில் நிலையத்தில் போலீஸாா் வெள்ளிக்கிழமை சோதனை மேற்கொண்டனா்.

ஆண்டுதோறும் டிச.6ஆம் தேதி பாபா் மசூதி இடிப்பு தினத்தையொட்டி, நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக கடைப்பிடிக்கப்படுகிறது. அதன்படி தூத்துக்குடி ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு போலீஸாா், வெள்ளிக்கிழமை தீவிர சோதனை மேற்கொண்டனா்.

பயணிகளின் உடைமைகள், ரயில் நிலையம், ரயிலில் ஒவ்வொரு பெட்டிகளிலும் சோதனை நடத்தினா். ரயிலில் எளிதில் தீப்பிடிக்க கூடிய பொருள்களை கொண்டு செல்லக்கூடாது என்று வலியுறுத்தி விழிப்புணா்வு நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com