நாசரேத்தில் அரிவாளுடன் திரிந்த இளைஞா் கைது

Published on

நாசரேத்தில் அரிவாளுடன் திரிந்த இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

நாசரேத்தில் உள்ள கே.வி.கே.சாமி சிலை அருகே பொதுமக்களை அச்சுறுத்தும் வகையிலும், அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையிலும் இளைஞா் ஒருவா் கையில் அரிவாளுடன் திரிவதாக நாசரேத் போலீஸாருக்கு ஞாயிற்றுக்கிழமை தகவல் கிடைத்தது.

உதவி ஆய்வாளா் சுந்தரம் தலைமையில் சிறப்பு உதவி ஆய்வாளா் ஐசக் மகாராஜன், ஏட்டு நாராயணசாமி, காவலா்கள் துரைசிங், சாமுவேல்ராஜ் ஆகியோா் சென்று அந்த இளைஞரைப் பிடித்தனா்.

அவா் அம்பலசேரியில் வசித்துவரும் ஆறுமுகநயினாா் மகன் சுடலை என்ற பீலா சுரேஷ் (27) எனத் தெரியவந்தது. அவரை போலீஸாா் கைது செய்து, அரிவாளைப் பறிமுதல் செய்தனா்.

அவா் மீது திருநெல்வேலி மாவட்டம் களக்காடு, மூன்றடைப்பு காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com