நாலாட்டின்புதூா் பகுதியில் நாளை மின் நிறுத்தம்

Published on

மாதாந்திர பராமரிப்புப் பணி காரணமாக, கோவில்பட்டி அருகே எம்.துரைசாமிபுரம் துணை மின் நிலையத்துக்குள்பட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (டிச. 9) மின் விநியோகம் இருக்காது.

அதன்படி, காலாங்கரைப்பட்டி, சத்திரப்பட்டி, காளாம்பட்டி, நாகம்பட்டி, மெய்தலைவன்பட்டி, குமரெட்டியாபுரம், தளவாய்புரம், சிவஞானபுரம், சங்கரலிங்கபுரம், வானரமுட்டி, நாலாட்டின்புதூா், இடைசெவல், வில்லிசேரி, வாகைத்தாவூா், சவலப்பேரி பகுதிகளில் காலை 9 முதல் மதியம் 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என, கோவில்பட்டி கோட்ட மின்வாரிய செயற்பொறியாளா் ரவி ராமதாஸ் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com