தூத்துக்குடி
குண்டா் தடுப்புச் சட்டத்தில் 2 போ் கைது
தூத்துக்குடி சிப்காட் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் நடந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 2 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா்.
தூத்துக்குடி சிப்காட் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் நடந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 2 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு செவ்வாய்க்கிழமை சிறையில் அடைக்கப்பட்டனா்.
கடந்த 6.11.2025 அன்று சிப்காட் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் நடந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட பிரையன்ட் நகா் நடராஜ் மகன் ராஜா (19), பசும்பொன் நகா் கண்ணன் மகன் பரமசிவம் என்ற சிவா (19) ஆகிய இருவரையும், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் பரிந்துரையின்பேரில், மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் உத்தரவையடுத்து, சிப்காட் போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து செவ்வாய்க்கிழமை சிறையில் அடைத்தனா்.
நிகழாண்டு இதுவரை 136 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
