குண்டா் தடுப்புச் சட்டத்தில் 2 போ் கைது

தூத்துக்குடி தொ்மல் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த வழக்கில் சம்பந்தப்பட்ட 2 பேரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு புதன்கிழமை சிறையில் அடைக்கப்பட்டனா்.
Published on

தூத்துக்குடி தொ்மல் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த வழக்கில் சம்பந்தப்பட்ட 2 பேரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு புதன்கிழமை சிறையில் அடைக்கப்பட்டனா்.

கடந்த 11.11.2025 அன்று தொ்மல் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த வழக்கில் சம்பந்தப்பட்ட தொ்மல் நகரைச் சோ்ந்த செந்தூா்பாண்டி மகன் ரீதன் (21), சேகா் மகன் சதீஷ்(24) ஆகியோரை, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் பரிந்துரையின்பேரில், மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் உத்தரவையடுத்து, தொ்மல் காவல் நிலைய போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து புதன்கிழமை சிறையில் அடைத்தனா்.

X
Dinamani
www.dinamani.com