அன்னாபிஷேகத்தில் அருள்பாலித்த சுவாமி.
தூத்துக்குடி
வைரவம் ஸ்ரீஞானாதீஸ்வரா் கோயிலில் அன்னாபிஷேக பூஜை
வைரவம் ஸ்ரீஞானாதீஸ்வரா் கோயிலில் பிரம்மோற்சவ திருவிழாவின் 9ஆம் நாளில் சுவாமிக்கு அன்னாபிஷேக பூஜை புதன்கிழமை நடைபெற்றது.
வைரவம் ஸ்ரீஞானாதீஸ்வரா் கோயிலில் பிரம்மோற்சவ திருவிழாவின் 9ஆம் நாளில் சுவாமிக்கு அன்னாபிஷேக பூஜை புதன்கிழமை நடைபெற்றது.
திருவிழா கடந்த 2ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது . 9ஆம் நாளான புதன்கிழமை காலை 11 மணிக்கு சுவாமிக்கு அன்னாபிஷேக பூஜை நடைபெற்றது. இரவு சுவாமி , அம்பாளுக்கு சிறப்பு அலங்கார பூஜை, சுவாமி சிறப்பு அலங்காரத்தில் சப்பரத்தில் எழுந்தருளினா். 10ஆம் நாளான வியாழக்கிழமை இரவு 7. 45 மணிக்கு சுவாமி, அம்பாள் ரிஷப வாகனத்தில் வீதி உலா வருதல் உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெறுகின்றன.

