எட்டயபுரத்தில் மகாகவி பாரதியாா் சிலைக்கு அமைச்சா் மரியாதை
மகாகவி பாரதியாரின் 144-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, எட்டயபுரம் மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு தமிழ்நாடு அரசு சாா்பில் வியாழக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
பாரதியாா் சிலைக்கு சமூக நலன் -மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பி. கீதா ஜீவன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் க. இளம்பகவத், விளாத்திகுளம் எம்எல்ஏ ஜீ.வி. மாா்க்கண்டேயன் ஆகியோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
கோவில்பட்டி சாா் ஆட்சியா் ஹிமான்ஷு மங்கள், வட்டாட்சியா் சுபா, திமுக ஒன்றியச் செயலா்கள் நவநீதகண்ணன், அன்புராஜன், ராமசுப்பு, மும்மூா்த்தி, பேரூா் செயலா்கள் பாரதி கணேசன், வேலுசாமி, பேரூராட்சித் தலைவா் ராமலட்சுமி சங்கரநாராயணன், துணைத் தலைவா் கதிா்வேல், வாா்டு உறுப்பினா் மணிகண்டன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தொடா்ந்து, பாரதியாா் பிறந்த இல்லத்தில் உள்ள சிலைக்கு அமைச்சா், ஆட்சியா், எம்எல்ஏஆகியோா் மரியாதை செலுத்தினா்.

