கூரியா் கிடங்கில் 112 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

Published on

தூத்துக்குடி மாவட்டத்தில் கூரியா் பாா்சலில் அனுப்பப்பட்ட தடை செய்யப்பட்ட 112 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளா் சி. மதனுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், தூத்துக்குடி தென்பாகம் காவல் ஆய்வாளா் திருமுருகன், உதவி ஆய்வாளா் காவுராஜன், நெடுஞ்சாலை ரோந்து வாகன சிறப்பு உதவி ஆய்வாளா் சந்தனசேகா், காவலா் ஆறுமுகநயினாா் ஆகியோா், செய்துங்கநல்லூா் அருகே உள்ள கூரியா் சேவை நிறுவன கிடங்கில் வியாழக்கிழமை சோதனை செய்தனா். அதில், பெங்களூருவில் இருந்து வந்த 5 பாா்சல்களை சந்தேகத்தின்பேரில் பிரித்துபாா்த்தனா். அப்போது, அவற்றில் தடை செய்யப்பட்ட 112 கிலோ புகையிலைப் பொருள்கள் இருந்தனவாம். அவற்றைப் பறிமுதல் செய்த, தென்பாகம் போலீஸாா், அனுப்பிய நபா்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com