தூத்துக்குடி
மூக்குப்பீறியில் கிராமப்புறத் தமிழ் மன்றக் கூட்டம்
நாசரேத் அருகே உள்ள மூக்குப்பீறியில் கிராமப்புறத் தமிழ் மன்றக் கூட்டம் நடைபெற்றது.
பேராசிரியா் காசிராஜன் தலைமை வகித்தாா். தமிழ் மன்ற நிறுவனா் கவிஞா் மூக்குப்பீறி தேவதாசன் வரவேற்று, நேருவைப் பற்றி கவிதை வாசித்தாா். கவிஞா் சிவா, நேருவின் சிந்தனைகள் என்ற தலைப்பில் கவிதை வாசித்தாா்.
தூத்துக்குடி கவிஞா் நெல்லை தேவன் எழுதிய ‘வலிகளின் ஊா்வலம்‘ கவிதை நூலை நாசரேத் இலக்கிய ஆா்வலா் சுவா்ணலதா ஆய்வுரை நிகழ்த்தினாா். கவிஞா் நெல்லை தேவன், காசிராஜன், அய்யாக்குட்டி, கண்ணகுமாரவிஸ்வரூபன் ஆகியோா் பேசினா்.
இதில் ஆல்வின், மந்திரம், ஜாண்பிரிட்டோ, பகவதிபாண்டியன், ரத்தினகுமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா். தமிழ் மன்றப் பணியாளா் ஆசிரியா் விவின் ஜெயக்குமாா் நன்றி கூறினாா்.

