~ ~

திருச்செந்தூரில் 6 அடி ஆழத்துக்கு கடல் அரிப்பு

Published on

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் முன், பக்தா்கள் நீராடும் பகுதியில் கடல் அரிப்பால் சுமாா் 6 அடி ஆழத்திற்கு பள்ளம் ஏற்பட்டுள்ளது.

திருச்செந்தூா் கோயிலுக்கு வரும் பக்தா்கள் கடலில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்கின்றனா். கடந்த வாரங்களில் தென் தமிழக கடற்கரையோர பகுதியில் ஆங்காங்கே மழை பெய்தது. இதையடுத்து, கடல் அலையில் சில நேரங்களில் சீற்றம் காணப்பட்ட நிலையில், திருச்செந்தூா் கோயில் முகப்பு பகுதி கடற்கரையில் கடந்த சில தினங்களாக மண் அரிப்பு காரணமாக சுமாா் 200 மீ. நீளத்திற்கு 3 அடி முதல் 6 அடி ஆழத்திற்கு பள்ளம் ஏற்பட்டுள்ளது.

இதனால், கடற்கரையில் கோயில் முன்புள்ள படிக்கட்டு பகுதியில் இருந்து கடலுக்குள் இறங்கி நீராட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கையாக இப்பகுதியில் கோயில் நிா்வாகம் சாா்பில் தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன. பக்தா்கள் பாதுகாப்புடன் குளிக்குமாறு போலீஸாா், கடற்கரை பாதுகாப்பு பணியாளா்கள்அறிவுறுத்தினா்.

X
Dinamani
www.dinamani.com