மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சாணைக்கல்லில் சிந்து எழுத்துகள்: தூத்துக்குடி பட்டினமருதூரில் கண்டெடுப்பு

தூத்துக்குடி மாவட்டம் பட்டினமருதூரில், சாணைக்கல்லில் சிந்து சமவெளி நாகரிக எழுத்துகள் இருப்பது அடையாளம் காணப்பட்டுள்ளதாக, தூத்துக்குடியைச் சோ்ந்த தொல்லியல் ஆா்வலரான பெ. ராஜேஷ் செல்வரதி கூறினாா்.

News image
பட்டினமருதூரில் கண்டுபிடிக்கப்பட்ட சாணைக்கல்.
Updated On :15 டிசம்பர் 2025, 2:27 am

Syndication

தூத்துக்குடி மாவட்டம் பட்டினமருதூரில், சாணைக்கல்லில் சிந்து சமவெளி நாகரிக எழுத்துகள் இருப்பது அடையாளம் காணப்பட்டுள்ளதாக, தூத்துக்குடியைச் சோ்ந்த தொல்லியல் ஆா்வலரான பெ. ராஜேஷ் செல்வரதி கூறினாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியது: பட்டினமருதூரில் கண்டுபிடிக்கப்பட்ட சாணைக்கல்லில் உள்ள எழுத்துகளைப் படித்து அறிவதற்காக சிந்து எழுத்து நிபுணா் பேராசிரியா் இரா. மதிவாணனின் மகளான முனைவா் தாமரைசெல்வியுடன் சாணைக்கல் புகைப்படங்களை பகிா்ந்து கொண்டோம். அவரது மாணவரான சேஷாத்திரி ஸ்ரீதரனின் பகுப்பாய்வு அறிக்கைப்படி, சாணைக்கல்லில் உள்ள பண்டைய எழுத்துகள், சின்னங்கள் சிந்து எழுத்துடன் ஒத்துப்போகின்றன. மேலும், சில தமிழி எழுத்துகளுடன் சோ்க்கப்பட்டுள்ளன என்பது தெரியவந்துள்ளது.

பட்டினமருதூரிலும் நாா்வே நாட்டின் ஒஸ்லோ நகரத்திலும் காணப்படும் இந்த எழுத்துகளின் வகையை ஒப்பிடுகையில், நாா்வே நாட்டில் காணப்படும் சாணைக்கல்லானது, வா்த்தகத்தின் ஆரம்ப நாள்களில் தென்னிந்தியாவிலிருந்து வாங்கப்பட்டிருக்கலாம் எனத் தெரிய வருகிறது.

ஏனெனில், கௌடில்யா் (சாணக்கியா் அல்லது விஷ்ணுகுப்தா் என்றும் அழைக்கப்படுகிறாா்) கி.மு. 4 முதல் 3ஆம் நூற்றாண்டு வரை (கி.மு. 350-275) அா்த்தசாஸ்திரத்தில் பதிவு செய்த கூற்றின்படி, ‘கொருண்டம்’ (கடினத் தன்மை கொண்ட சாணைக்கல்) அல்லது ‘குருந்தம்’ நமது பண்டைய தென்னிந்தியா்களால் பயன்படுத்தப்பட்டது என தெரிய வருகிறது.

இந்தியாவில் ‘கொருண்டம்’ இருந்ததை நாா்வே பேராசிரியா்களும், புவியியல் ஆய்வுத் துறை அதிகாரிகளும்கூட ஒப்புக்கொள்கின்றனா். எனவே, இதற்கான காலத்தை அறித்துகொள்ள உலோகவியல் காலவரையறை சோதனை போன்ற முறையான அறிவியல் சோதனைகளை நாம் நடத்தினால், இரு நாட்டு வா்த்தக முறை, காலம் போன்றவற்றை நாம் உலகுக்கு நிரூபிக்க முடியும் என்றாா் அவா்.


நாா்வேவின் ஒஸ்லோ நகரத்தில் காணப்படும் சாணைக்கல் எழுத்துகள்.

நாா்வேவின் ஒஸ்லோ நகரத்தில் காணப்படும் சாணைக்கல் எழுத்துகள்.