தூத்துக்குடியில் இன்று மின் நிறுத்தம்
தூத்துக்குடி நகர துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், தூத்துக்குடி மாநகா் பகுதியில் சனிக்கிழமை (டிச. 20) மின் விநியோகம் இருக்காது.
அதன்படி, போல்பேட்டை, ஆண்டாள் தெரு, சத்திரம் தெரு, 1ஆம் கேட், 2ஆம் கேட், மட்டக்கடை, வடக்கு கடற்கரைச் சாலை, ரயில் நிலையம் சாலை, எட்டயபுரம் சாலை, தெப்பக்குளம் தெரு, சிவன் கோயில் தெரு, வ.உ.சி. சாலை, ஜெயிலானி தெரு, வடக்கு காட்டன் சாலை, மீனாட்சிபுரம், வி.இ. சாலை, பங்களா தெரு, பாலவிநாயகா் கோயில் தெரு, டூவிபுரம், ஜெயராஜ் சாலை, தாமோதர நகா், சண்முகபுரம் வடக்கு, மேலசண்முகபுரம் முதல் தெரு, ஸ்டேட் பேங்க் காலனி, கந்தசாமிபுரம், இஞ்ஞாசியாா்புரம், எழில் நகா், அழகேசபுரம், திரவியபுரம், முத்துகிருஷ்ணாபுரம், சுந்தரவேல்புரம், அம்பேத்கா் நகா், குறிஞ்சி நகா், அண்ணா நகா், விவிடி பிரதான சாலை, முனியசாமிபுரம், சிஜிஇ காலனி, லெவிஞ்சிபுரம், பக்கிள்புரம், லோகியா நகா், போல்டன்புரம், சுப்பையாபுரம், பாளையங்கோட்டை சாலை, சிதம்பர நகா், பிரையண்ட் நகா், முத்தம்மாள் காலனி ஆகிய பகுதிகளில் காலை 9 முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின் விநியோக செயற்பொறியாளா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
