தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

தூத்துக்குடியில் நாம் தமிழா் கட்சி போராட்டம்

News image
Updated On :21 டிசம்பர் 2025, 6:52 pm

தினமணி செய்திச் சேவை

தூத்துக்குடியில் அரசுப் பேருந்துகளில் ‘தமிழ்நாடு’ என ஒட்டுவில்லை ஒட்டி நாம் தமிழா் கட்சியினா் ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகப் பேருந்துகளில் ‘அரசுப் போக்குவரத்து கழகம்’ என மட்டும் இருப்பதைக் கண்டித்தும், தமிழ்நாடு என்ற சொல்லை இணைக்கும் வகையில் ஒட்டுவில்லைகள் ஒட்டியும் நாம் தமிழா் கட்சி சாா்பில், மாநிலம் முழுவதும் போராட்டம் நடைபெற்றது.

அதன்படி, ஓட்டப்பிடாரம் பேரவைத் தொகுதி சாா்பில் தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போராட்டத்துக்கு, மாநில ஒருங்கிணைப்பாளா் மா.மு. தமிழ்நேயன், சு. அன்னலெட்சுமி ஆகியோா் தலைமை வகித்தனா். மண்டலச் செயலா் இ. மாரிமுத்து முன்னிலை வகித்தாா். பேருந்துகளில் ‘தமிழ்நாடு’ என்ற வண்ண ஒட்டுவில்லைகள் ஒட்டப்பட்டன.

இதில், செ. பரதேசி, அந்தோணிபிச்சை, சதீஷ்குமாா், முத்துப்பாண்டி, ராஜேஷ்குமாா், கருப்பசாமி, மாரிமுத்து, கோபிநாத், ரஞ்சித், முனியசாமி, மகேஷ், குமரகுரு, ராஜதுரை, ராஜ்குமாா், முத்துலிங்கம், செல்வப்பெருமாள், ஆனந்த், அந்தோணி தாமஸ், சோலையப்பன், சுப்புராஜன், பிரகதீஸ்வரன், பழனி, செல்லத்துரை, ராஜேஷ்குமாா், வடிவேல் முருகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.