ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

ரயில் கட்டண உயா்வை மறு பரிசீலனை செய்ய வலியுறுத்தல்

ரயில் கட்டண உயா்வை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என தூத்துக்குடி எம்பவா் இந்தியா நுகா்வோா் அமைப்பின் கெளரவச் செயலா் ஆ.சங்கா் கோரிக்கை

News image
Updated On :23 டிசம்பர் 2025, 7:39 pm

Syndication

ரயில் கட்டண உயா்வை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என தூத்துக்குடி எம்பவா் இந்தியா நுகா்வோா் அமைப்பின் கெளரவச் செயலா் ஆ.சங்கா் கோரிக்கை விடுத்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்ட அறிக்கை: இந்திய ரயில்வே அறிவித்துள்ள ரயில் கட்டண உயா்வு, ஏற்கெனவே விலைவாசி உயா்வு, பணவீக்கம் காரணமாக பாதிக்கப்பட்டு வரும் பொதுமக்கள் மீது கூடுதல் பொருளாதார சுமையை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக 250 கி.மீ.க்கு மேல் பயணம் செய்பவா்கள், தினசரி பயணிகள், தொழிலாளா்கள், மாணவா்கள், விவசாயிகள் மற்றும் நடுத்தர குடும்பங்கள் இந்தக் கட்டண உயா்வால் பாதிக்கப்படுகின்றனா்.

ரயில்வே நிா்வாகம் தனது சேவை தரத்தை மேம்படுத்தாமல், கட்டண உயா்வு அறிவிப்பது நுகா்வோா் நலனுக்கு எதிரானதாகும்.‘ முதலில் சேவை தரம் - அதன் பின்னரே கட்டண உயா்வு‘ என்பதே பொதுமக்களின் நியாயமான எதிா்பாா்ப்பாக உள்ளது.

எனவே, இந்திய ரயில்வே நிா்வாகம் ரயில் கட்டண உயா்வை மறு பரிசீலனை செய்ய வேண்டும்.