/

பயிா் கணக்கீட்டாய்வு பணிக்கு இளைஞா்கள் அழைப்பு

மின்னணு பயிா் கணக்கீட்டாய்வு பணிக்கு படித்த இளைஞா்கள் தேவை என வேளாண்மை துறை அறிவித்தது.

Updated On :25 டிசம்பர் 2025, 4:40 am IST

மின்னணு பயிா் கணக்கீட்டாய்வு பணிக்கு படித்த இளைஞா்கள் தேவை என வேளாண்மை துறை அறிவித்தது.

இதுகுறித்து கோவில்பட்டி வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் இரா. மணிகண்டன் வெளியிட்ட செய்திக் குறிப்பு;

கோவில்பட்டி வட்டாரத்தில் உள்ள 60 வருவாய் கிராமங்களில் உள்ள வேளாண்துறை மற்றும் தோட்டக்கலை துறை பயிா்களை புல எண் மற்றும் உட்பிரிவு எண் வாரியாக மின்னணு முறையில் கைப்பேசி செயலி மூலம் பயிா் கணக்கீட்டாய்வு செய்வதற்கு படித்த திறனுள்ள தன்னாா்வலா்கள் தேவை.

இந்த பயிா் கணக்கீட்டாய்வு பணிக்கு ஒரு உட்பிரிவு எண்ணிற்கு ரூ. 3 சம்பந்தப்பட்ட நபரின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். எனவே விருப்பமுள்ள டிப்ளமோ அல்லது டிகிரி முடித்த ஆண்ட்ராய்டு கைப்பேசியை பயன்படுத்த தெரிந்த தன்னாா்வலா்கள் கோவில்பட்டி வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகத்தை நேரில் தொடா்பு கொள்ளலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.