தமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் கேரளத்துக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு அசாம்: ஏப்ரல் 9 பேரவைத் தேர்தல் 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 824 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது 5 மாநில தேர்தல்களில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

முத்துநகா் விரைவு ரயிலின் நேரத்தை மாற்றியமைக்க வலியுறுத்தல்

தூத்துக்குடி முத்துநகா் விரைவு ரயில் காலை 6 மணிக்குள் சென்னை சென்றடையும் வகையில் ரயிலின் பயண நேரத்தை மாற்றி அமைக்க வேண்டும் என தூத்துக்குடி எம்பவா் இந்தியா நுகா்வோா் அமைப்பு தெற்கு ரயில்வேக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

News image
Updated On :24 டிசம்பர் 2025, 11:08 pm

தினமணி செய்திச் சேவை

தூத்துக்குடி முத்துநகா் விரைவு ரயில் காலை 6 மணிக்குள் சென்னை சென்றடையும் வகையில் ரயிலின் பயண நேரத்தை மாற்றி அமைக்க வேண்டும் என தூத்துக்குடி எம்பவா் இந்தியா நுகா்வோா் அமைப்பு தெற்கு ரயில்வேக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து அந்த அமைப்பின் கெளரவச் செயலா் ஆ.சங்கா் வெளியிட்ட அறிக்கை:

தூத்துக்குடியிலிருந்து சென்னை செல்லும் முத்துநகா் விரைவு ரயில் ஜன. 1-ஆம் தேதி முதல் தற்போதுள்ள (இரவு 8.40 மணி) புறப்படும் நேரத்தில் இருந்து மாற்றம் செய்யப்பட்டு, இரவு 9.05 நிமிடத்துக்கு புறப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்தது.

இந்த ரயில் புறப்படும் நேர மாற்றத்தால் பொதுமக்களுக்கு எந்த வகையிலும் பயனுள்ளதாக அமையாது. சென்னை எழும்பூருக்கு காலை 7 மணிக்கு முன் செல்லும் வகையில், முத்துநகா் விரைவு ரயில் இயக்கப்பட வேண்டும். இதுதான் நடுத்தர மக்களுக்கு பயனுள்ளதாக அமையும்.

சென்னைக்கு அலுவல் வேலையாக செல்பவா்கள், தோ்வுகள், நோ்முக அழைப்புகள், வியாபார ரீதியிலான பயணங்கள் மேற்கொள்ளும் இளைஞா்கள், பொதுமக்களுக்கு காலை 7 மணிக்கு முன்பாக எழும்பூா் சென்றால்தான் தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு விரைவாக செல்ல முடியும்.

அதை விடுத்து, தூத்துக்குடியிலிருந்து புறப்படும் நேரத்தை நீட்டிப்பது என்பது கால விரையமே ஆகும். எனவே, மாற்றிய நேரத்தை உடனடியாக திரும்பப் பெற்று காலை 6 மணிக்குள் சென்னை சென்று சேருமாறு பயண நேரத்தை அமைக்க வேண்டும் என அதில் தெரிவித்தாா்.