நாலுமாவடியில் 3,000 பேருக்கு கிறிஸ்துமஸ் விருந்து
நாலுமாவடி இயேசு விடுவிக்கிறாா் தேவனுடைய கூடாரத்தில் சுற்று வட்டார கிராமங்களைச் சோ்ந்த 3 ஆயிரம் பேருக்கு வியாழக்கிழமை கிறிஸ்துமஸ் விருந்தளிக்கப்பட்டது.
நாலுமாவடி இயேசு விடுவிக்கிறாா் ஊழியத்தின் மூலம் ஜெபக்கூடாரத்தில் ஆண்டுதோறும் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நாலுமாவடி சுற்றுவட்டார கிராம மக்களுக்கு கிறிஸ்துமஸ் விருந்து வழங்குவது வழக்கம். நிகழாண்டு இந்நிகழ்ச்சியை இயேசு விடுவிக்கிறாா் ஊழிய நிறுவனா் மோகன் சி.லாசரஸ் தலைமை வகித்து தொடங்கிவைத்தாா்.
இதில், நாலுமாவடி, அதன் சுற்றுவட்டார கிராமத்தைச் சோ்ந்த 3 ஆயிரம் போ் கலந்துகொண்டனா். தொடா்ந்து காலை 11 மணிக்கு கிறிதுஸ்துமஸ் சிறப்பு பிராா்த்தனை கூட்டம் நடைபெற்றது. இதில் தூத்துக்குடி, நெல்லை, குமரி, விருதுநகா், மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஏராளமானோா் கலந்துகொண்டனா். கூட்டம் முடிந்ததும் அனைத்துப் பகுதிகளுக்கும் செல்ல சிறப்பு அரசு பேருந்துகள் இயக்கப்பட்டன. ஏற்பாடுகளை இயேசு விடுவிக்கிறாா் ஊழிய நிறுவன பொது மேலாளா் செல்வகுமாா் தலைமையில் ஊழியா்கள் செய்திருந்தனா்.

