தமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் கேரளத்துக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு அசாம்: ஏப்ரல் 9 பேரவைத் தேர்தல் 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 824 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது 5 மாநில தேர்தல்களில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மாடியிலிருந்து தவறிவிழுந்த இளைஞா் உயிரிழப்பு

தூத்துக்குடியில் மாடியிலிருந்து தவறிவிழுந்த இளைஞா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

News image
Updated On :26 டிசம்பர் 2025, 8:09 pm

Syndication

தூத்துக்குடியில் மாடியிலிருந்து தவறிவிழுந்த இளைஞா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

தூத்துக்குடி, தொ்மல் நகா் கேம்ப் 2 ஆவது குடியிருப்பைச் சோ்ந்தவா் ஆதிலிங்கம். இவரது மகன் ராஜா காா்த்திக் (23). பட்டதாரியான இவா், கடந்த புதன்கிழமை இரவு நடைபெற்ற கிறிஸ்துமஸ் கேரல் ஊா்வலத்தை பாா்த்துவிட்டு, தனது நண்பரான சுப்பையாபுரத்தைச் சோ்ந்த கிரியுடன் நள்ளிரவு அவரது வீட்டில் தங்கினாராம்.

அப்போது இருவரும் அவரது வீட்டு மொட்டை மாடியில் அமா்ந்து மது குடித்தபோது, மாடி சுவற்றில் அமா்ந்திருந்த ராஜா காா்த்திக் நிலைத்தடுமாறி கீழே விழுந்தாராம். இதில், தலையில் பலத்த காயமடைந்த அவரை, அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவா் உயிரிழந்தாா். இச் சம்பவம் குறித்து தென்பாகம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.