அம்மா உணவகங்களை தினசரி பயன்படுத்துவோர் எண்ணிக்கை உயர்வு- சென்னை மாநகராட்சி கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜீத் திப்கே மீது மை வீசித் தாக்குதல்!புதுச்சேரியில் காற்றில் பறக்க விடப்பட்ட பேனர் தடை சட்டம்! என்ன சொல்கிறார்கள் மக்கள்?வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது விக்ரம்-1 ராக்கெட்!விரைவில் நாட்டில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்! ஆர்பிஐ திட்டம்!போலி பத்திரப்பதிவுகள் குறித்து மக்கள் புகாரளிக்கலாம்: அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல் எப்போது? அமைச்சர் மரிய வில்சன் தகவல்
/

சாத்தான்குளத்தில் உழவா் நல சேவை மையம் திறப்பு

சாத்தான்குளத்தில் நாசரேத் சாலையில் ‘முதல்வா் உழவா் நல சேவை மையம்’ திறப்பு விழா நடைபெற்றது.

News image

நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.

Updated On :28 டிசம்பர் 2025, 1:13 am IST

சாத்தான்குளத்தில் நாசரேத் சாலையில் ‘முதல்வா் உழவா் நல சேவை மையம்’ திறப்பு விழா நடைபெற்றது.

திருவண்ணாமலையில் சனிக்கிழமை நடைபெற்ற உழவா்கள் கண்காட்சி-மாநாட்டில் முதல்வா் மு.க. ஸ்டாலின் பங்கேற்று, காணொலி வாயிலாக இம்மையத்தைத் திறந்துவைத்தாா்.

இதையொட்டி, இங்கு நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட திட்டக்குழு உறுப்பினரும் வடக்கு ஒன்றிய திமுக செயலருமான ஏ.எஸ். ஜோசப் தலைமை வகித்தாா். வட்டார வேளாண் உதவி இயக்குநா் (பொறுப்பு) ராமலட்சுமி வரவேற்றாா். நகர திமுக செயலா் மகா இளங்கோ, தொழிலதிபா் ஏ.ஆா். சசிகரன், மாவட்ட திமுக பிரதிநிதி லெ. சரவணன், பேரூராட்சி கவுன்சிலா்கள் ஜோசப் அலெக்ஸ், லிங்கபாண்டி, வட்டார காங்கிரஸ் தலைவா் பாா்த்தசாரதி, விவசாயிகள் பங்கேற்றனா்.

அரசு உதவியுடன் வேளாண் பட்டதாரிகள் உரிமம் பெற்று நடத்தவுள்ள இம்மையத்தில், விவசாயிகள் குறைந்த விலையில் உரம், பூச்சிக்கொல்லி மருந்துகள், சிறுதானிய விதைகள், வாடகைக்கு விவசாய தளவாடப் பொருள்கள் பெறலாம். இம்மையத்தின் பரிந்துரையின்பேரில் வங்கிக் கடன்கள் வழங்கப்படவுள்ளது. இங்கு விற்கப்படும் மருந்து, உரங்களின் தரம் குறித்து ஆய்வு செய்யப்படும் என வேளாண் அதிகாரிகள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.