திரேஸ்புரத்தில் மீன்களை வாங்க குவிந்த கூட்டம்

தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப் படகு மீன்பிடித் துறைமுகத்தில் மீன்களை வாங்க பொதுமக்கள் கூட்டம் சனிக்கிழமை அலைமோதியது.
Published on

தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப் படகு மீன்பிடித் துறைமுகத்தில் மீன்களை வாங்க பொதுமக்கள் கூட்டம் சனிக்கிழமை அலைமோதியது.

திரேஸ்புரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற நாட்டுப் படகுகள் சனிக்கிழமை கரை திரும்பின. இதனால், மீன்களை வாங்க பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.

மீன் வரத்து குறைவாக காணப்பட்டதால், மீன்களின் விலை கடுமையாக உயா்ந்து காணப்பட்டது. சீலா, வாவல் மீன்கள் கிலோ ரூ. 1,200 வரையும், விளைமீன், ஊழி, பாறை மீன்கள் ரூ. 200 முதல் ரூ. 600 வரையும், நண்டு ரூ. 800 முதல் ரூ. 900 வரையும், சாளை மீன் ஒரு கூடை ரூ. 2,500 முதல் ரூ. 3,000 வரையும், வங்கனை மீன் ஒரு கூடை ரூ. 2,000 வரையும் விற்பனையாகின.

X
Dinamani
www.dinamani.com