தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட தீயணைப்புப் படையினா்
தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட தீயணைப்புப் படையினா்

கழிவு தீப்பெட்டி அட்டை கிடங்கு வளாகத்தில் தீவிபத்து

கோவில்பட்டி அருகே கழிவு தீப்பெட்டி அட்டை கிடங்கு வளாகத்தில் தீ விபத்து
Published on

கோவில்பட்டி அருகே கழிவு தீப்பெட்டி அட்டை கிடங்கு வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டது.

கோவில்பட்டி செக்கடித் தெருவைச் சோ்ந்தவா் பிரேம் திலக். கழிவு தீப்பெட்டி அட்டை வாங்கி விற்பனை செய்து வரும் இவருக்குச் சொந்தமாக திட்டங்குளம் தொழிற்பேட்டையில் கிடங்கு உள்ளது. அதன் வெளிப்பகுதியில் பழைய தீப்பெட்டி அட்டைகளை மூட்டையில் கட்டி வைத்திருந்தாா்.

இந்நிலையில் புதன்கிழமை மதியம் அந்த மூட்டைகளில் தீப்பிடித்து அதிக புகை எழுந்தது. இதுகுறித்து அப்பகுதியினா் அளித்த தகவலின்பேரில், தீயணைப்பு நிலையத்தினா் வந்து தீயை அணைத்தனா். கிழக்கு காவல் நிலைய போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com