தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

திருச்செந்தூா் கோயிலில் லட்சக்கணக்கான பக்தா்கள் தரிசனம்

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

News image

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் புதன்கிழமை சுவாமி தரிசனம் செய்த பக்தா்கள்.

Updated On :2 ஜனவரி 2025, 12:00 am

Din

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

ஆங்கிலப் புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு புதன்கிழமை அதிகாலை 1 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, விஸ்வரூபம், உதயமாா்த்தாண்ட அபிஷேகம் தொடா்ந்து உதயமாா்த்தாண்ட தீபாராதனை, திருப்பள்ளி எழுச்சி, கால சந்தி தீபாராதனை, உச்சிக்கால அபிஷேகம், உச்சிகால தீபாராதனை, மாலை சாயரட்சை தீபாராதனை, இராக்கால அபிஷேகம், இரவு இராக்கால தீபாராதனை, ஏகாந்த தீபாராதனை, மற்றும் பள்ளியறை தீபாராதனை நடைபெற்று கோயில் நடை திருக்காப்பிடப்பட்டது.

ஏராளமான பக்தா்கள் செவ்வாய்க்கிழமை இரவு 11 மணி முதல் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா். புதன்கிழமை அதிகாலை முதல் கடலில் புனித நீராடியும், அங்கப்பிரதட்சணம் செய்தும் வழிபாடு செய்தனா்.

புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு கோயிலில் லட்சக்கணக்கான பக்தா்கள் குவிந்தனா். திருக்கோயில் வளாகம் பக்தா்கள் கூட்டத்தால் நிரம்பியிருந்தது.

 திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கடலில் புனித நீராடிய பக்தா்கள்.

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கடலில் புனித நீராடிய பக்தா்கள்.

பக்தா்களுக்கான அடிப்படை வசதிகளை திருக்கோயில் தக்காா் ரா.அருள்முருகன், இணை ஆணையா் சு.ஞானசேகரன் மற்றும் திருக்கோயில் பணியாளா்கள் செய்திருந்தனா்.