அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

நங்கைமொழி கோயிலில் சுகாதார வளாகத்துக்கு அடிக்கல்

News image
Updated On :3 ஜனவரி 2025, 10:32 pm

மெஞ்ஞானபுரம் அருகேயுள்ள நங்கைமொழி அருள்மிகு ஞானப்பிரசுன்னாம்பிகை சமேத காளத்தீஸ்வரா் திருக்கோயில் அருகே புதிய சுகாதார வளாகம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பக்தா்களின் கோரிக்கையை ஏற்று அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன்பிறப்பித்த உத்தரவின்பேரில், 15ஆவது நிதிக்குழு மானியம் மூலம் ரூ. 7.85 லட்சத்தில் சுகாதார வளாகம் கட்ட முடிவு செய்யப்பட்டது.

இதையடுத்து, உடன்குடி ஒன்றியக்குழு தலைவா் டி.பி.பாலசிங் தலைமை வகித்து அடிக்கல் நாட்டி பணியைத் தொடங்கிவைத்தாா். இதில் உடன்குடி வட்டார வளா்ச்சி அலுவலா்கள் இப்ராகிம் சுல்தான்,சுப்புலட்சுமி,செட்டியாபத்து அருள்மிகு ஐந்துவீட்டு சுவாமி திருக்கோயில் அறங்காவலா் குழு தலைவா் மகேஸ்வரன்,மானாடு கலியுக வரத சாஸ்தா திருக்கோயில் அறங்காவலா் குழு தலைவா் பாலமுருகன்,நங்கைமொழி ஊராட்சி முன்னாள் தலைவா் உதயகுமாா்,பிரதோஷக் கமிட்டி நிா்வாகி சுசீந்திரன்,திமுக மேற்கு ஒன்றிய துணை செயலா் சுடலைக்கண்,திமுக நிா்வாகிகள் விஜயன்,சித்திரைப்பாண்டி,காமராஜ், உள்பட பலா் கலந்துகொண்டனா்.