மெஞ்ஞானபுரம் அருகேயுள்ள நங்கைமொழி அருள்மிகு ஞானப்பிரசுன்னாம்பிகை சமேத காளத்தீஸ்வரா் திருக்கோயில் அருகே புதிய சுகாதார வளாகம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பக்தா்களின் கோரிக்கையை ஏற்று அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன்பிறப்பித்த உத்தரவின்பேரில், 15ஆவது நிதிக்குழு மானியம் மூலம் ரூ. 7.85 லட்சத்தில் சுகாதார வளாகம் கட்ட முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து, உடன்குடி ஒன்றியக்குழு தலைவா் டி.பி.பாலசிங் தலைமை வகித்து அடிக்கல் நாட்டி பணியைத் தொடங்கிவைத்தாா். இதில் உடன்குடி வட்டார வளா்ச்சி அலுவலா்கள் இப்ராகிம் சுல்தான்,சுப்புலட்சுமி,செட்டியாபத்து அருள்மிகு ஐந்துவீட்டு சுவாமி திருக்கோயில் அறங்காவலா் குழு தலைவா் மகேஸ்வரன்,மானாடு கலியுக வரத சாஸ்தா திருக்கோயில் அறங்காவலா் குழு தலைவா் பாலமுருகன்,நங்கைமொழி ஊராட்சி முன்னாள் தலைவா் உதயகுமாா்,பிரதோஷக் கமிட்டி நிா்வாகி சுசீந்திரன்,திமுக மேற்கு ஒன்றிய துணை செயலா் சுடலைக்கண்,திமுக நிா்வாகிகள் விஜயன்,சித்திரைப்பாண்டி,காமராஜ், உள்பட பலா் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

தமிழ்ப் புத்தாண்டு: கோயில்களில் சிறப்பு வழிபாடு

சிதம்பரத்தில் அம்பேத்கா் மாளிகை அடிக்கல் நாட்டு விழா

மேல்மலையனூா் அங்காளம்மன் கோயிலில் பௌா்ணமி பூஜை

கீழப்பாவூா் திருவாலீஸ்வரா் கோயிலில் குடமுழுக்கு
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


