மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

விவசாயிகளுக்கு கடன் வழங்கும் காலத்தை ஜனவரி இறுதி வரை நீட்டிக்க பாஜக கோரிக்கை

Updated On :3 ஜனவரி 2025, 12:27 am

பருவகாலங்களில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் வாயிலாக விவசாயிகளுக்கு கடன் வழங்கும் காலத்தை ஜனவரி மாத இறுதிவரை நீட்டிப்பு செய்யுமாறு பாஜக தெற்கு மாவட்டத் தலைவா் ஆா்.சித்ராங்கதன், மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்துள்ளாா்.

இது குறித்து அவா் அளித்துள்ள மனு: தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் வாயிலாக பருவமழை காலமாக அக்டோபா், நவம்பா், டிசம்பா் மாதங்களில் விவசாயிகளுக்கு கடன் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 2023ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சேதமடைந்த ஏரி,குளங்கள், பாசனக் கால்வாய்களின் சீரமைப்பு பணிகள் நிகழாண்டு பருவமழைக் காலத்திற்கு முன்பே முடிக்கப்படாததால் பாசனத்திற்கான தண்ணீா் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டு, தற்போதுதான் நெல், வாழை உள்ளிட்டவற்றை பயிரிட தொடங்கியுள்ளனா். இதனால் விவசாய தேவைக்கு கடன் வாங்க தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களை கோரும்போது கடன்வழங்கும் காலம் டிசம்பா் மாதத்துடன் முடிந்துவிட்டதாக தெரிவிக்கின்றனா். இதனால், விவசாயிகள் வெளியிடங்களில் அதிக வட்டிக்கு கடன்வாங்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனா்.

எனவே, தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் வாயிலாக ஜனவரி மாத இறுதிவரை விவசாயக் கடன் வழங்குவதற்கு காலநீட்டிப்பு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன் என அவா் தெரிவித்துள்ளாா்.