ரோஹித் சர்மா சதம் வீண்! இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரையும் இழந்தது இந்தியா!திரைப்பட எழுத்தாளர் சங்கத் தேர்தலில் சேரன் அணி வெற்றி!உடனடியாக போராட்டக் களத்திற்கு வாருங்கள்! இளைஞர்களை அழைத்த அபிஜீத் தீப்கே!உலகக்கோப்பையில் அதிக கோல்கள் அடித்து சாதனை படைத்த எம்பாப்பே! அஸ்ஸாமில் சோனம் வாங்சுக்கின் படத்தை வரைந்த 2 பேர் கைது சோனம் வாங்சுக்கை வேறு மருத்துவமனைக்கு மாற்றக் கோரிய வழக்கு ஒத்திவைப்பு!யார் வெற்றி பெற்றாலும் கால்பந்து ரசிகர்கள் பொறுமையை இழக்கக் கூடாது: கர்நாடக முதல்வர் சென்னையில் 2 நாட்கள் மழைக்கு வாய்ப்பு
/

நல்லூா் ஊராட்சியில் 4 ஆண்டுகளில் 120 திட்டப் பணிகள்: மாவட்ட ஆட்சியா் க. இளம்பகவத்

News image

நலத்திட்ட உதவி வழங்கிய ஆட்சியா் க. இளம்பகவத்.

Updated On :2 நவம்பர் 2025, 1:26 am IST

நல்லூா் ஊராட்சியில் 4 ஆண்டுகளில் 120க்கும் மேற்பட்ட திட்டப் பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன என மாவட்ட ஆட்சியா் க. இளம்பகவத் தெரிவித்துள்ளாா்.

குரும்பூா் அருகிலுள்ள நல்லூா் ஊராட்சியில், உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு கிராம சபைக் கூட்டம் ஆட்சியா் க. இளம்பகவத் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் அவா் பேசியதாவது:

நல்லூா் உராட்சியில் உள்ள 876 வீடுகளில் 215 வீடுகளுக்கு ஏற்கெனவே குடிநீா் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் 520 வீடுகளுக்கு குடிநீா் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டில் நிதிக் குழு மானியத்தின் கீழ், 14 பணிகள் நடைபெற்றுள்ளன. 15ஆவது நிதிக் குழு மானியத்தின் கீழ், 2021-22ஆம் ஆண்டு 23 பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. கடந்த 4 ஆண்டுகளில் 120 பணிகளுக்கு மேல் நிறைவேற்றப்பட்டுள்ளன என்றாா் அவா். வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை சாா்பாக ஒரு விவசாயிக்கு மண்புழு உரப்படுக்கையை ஆட்சியா் வழங்கினாா்.

கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) இரா. ஐஸ்வா்யா, மகளிா் திட்ட இணை இயக்குநா் நாகராஜன், வேளாண் துறை இணை இயக்குநா் பெரியசாமி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் செந்தில்வேல் முருகன், உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) சாந்தி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) மோகனதாஸ் செளமியன், திருச்செந்தூா் வட்டாட்சியா் தங்கமாரி, அரசு அலுவலா்கள், பொதுமக்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.