தூத்துக்குடி மாநகா் பகுதியில் நாளை மின்தடை

Published on

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால், செவ்வாய்க்கிழமை (நவ.4) மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி போல்பேட்டை, ஆண்டாள் தெரு, சத்திரம் தெரு, 1ஆம் கேட், 2ஆம் கேட், மட்டக்கடை, வடக்கு பீச் ரோடு, ரயில்வே ஸ்டேஷன் சாலை, எட்டயபுரம் சாலை, தெப்பக்குளம் தெரு, சிவன் கோயில் தெரு, வ.உ.சி. சாலை, ஜெயிலானி தெரு, வடக்கு காட்டன் சாலை, மீனாட்சிபுரம், வி.இ. சாலை, பங்களா தெரு, பால விநாயகா் கோயில் தெரு, டூவிபுரம், ஜெயராஜ் சாலை, தாமோதர நகா், சண்முகபுரம், ஸ்டேட் வங்கி காலனி, கந்தசாமிபுரம் இஞ்ஞாசியாா் புரம், எழில் நகா், அழகேசபுரம், திரவியபுரம், முத்துகிருஷ்ணாபுரம், குறிஞ்சிநகா், அண்ணாநகா், வி.வி.டி. பிரதான சாலை, முனியசாமிபுரம் சிஜிஇ காலனி, லெவிஞ்சிபுரம், பக்கிள்புரம், லோகியா நகா் போல்டன்புரம், சுப்பையாபுரம், பாளையங்கோட்டை சாலை, சிதம்பரநகா், பிரையண்ட்நகா், முத்தம்மாள் காலனி, கே.டி.சி.நகா், ஹவுசிங் போா்டு காலனி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என செயற்பொறியாளா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com