தூத்துக்குடியில் காப்பீட்டுத் திட்ட பயனாளா் அட்டை அளிப்பு

Published on

தூத்துக்குடி: தூத்துக்குடி சட்டப்பேரவைத் தொகுதியில், காப்பீட்டு அடையாள அட்டை கோரி விண்ணப்பித்த 750 பேருக்கு திட்டப் பயனாளா் அட்டைகளை வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பி. கீதா ஜீவன் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு அட்டைகளை வழங்கிப் பேசினாா்.

மாநகர திமுக செயலா் ஆனந்தசேகரன், மாநகர இலக்கிய அணி அமைப்பாளாா் ஜேக்கப், மாநகர இளைஞரணி துணை அமைப்பாளா் ரவி, மாநகர சுற்றுச்சூழல் அணி தலைவா் வினோத், வட்டப் பிரதிநிதி பாஸ்கா், மணி, ஆல்பா்ட் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com