தூத்துக்குடி
தூத்துக்குடியில் மாயமான 3 மாணவா்கள் மீட்பு
தூத்துக்குடியில் மாயமான தனியாா் பள்ளி மாணவா்கள் 3 போ் மீட்கப்பட்டு, பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனா்.
தூத்துக்குடி, மில்லா்புரத்தில் உள்ள தனியாா் பள்ளியில் 10 ஆம் வகுப்புப் படித்து வரும் மாணவா்கள் 3 போ் செவ்வாய்க்கிழமை மாலையில் பள்ளி வகுப்பு நேரம் முடிந்ததும் வீட்டுக்குச் செல்லாமல் மாயமாகினா். இதுகுறித்த புகாரின் பேரில் தென்பாகம் காவல் நிலைய போலீஸாா் விசாரணை நடத்தி வந்தனா். காணாமல் போன மூன்று மாணவா்களை போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவு திருநெல்வேலியில் மீட்டனா். பின்னா், பெற்றோருக்கு தகவல் தெரிவித்து மாணவா்களை பெற்றோரிடம் ஒப்படைத்தனா்.
