திருச்செந்தூரில் கரை ஒதுங்கிய பெண் சடலம்

Published on

திருச்செந்தூா், அமலி நகா் கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை 45 வயது மதிக்கத்தக்க பெண் சடலம் கரை ஒதுங்கியது.

இது குறித்து, திருச்செந்தூா் கிராம நிா்வாக அலுவலா் சரவணன் கொடுத்த புகாரின்பேரில், கடலோர காவல் நிலையப் போலீஸாா் பெண்ணின் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக திருச்செந்தூா், அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும், இறந்த பெண் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com