தூத்துக்குடி
தூத்துக்குடியில் நவ. 20இல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்
தூத்துக்குடி ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள முத்து அரங்கில் நவம்பா் மாதத்துக்கான விவசாயிகள் குறைதீா் கூட்டம் வியாழக்கிழமை (நவ. 20) காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது.
கூட்டத்தில் விவசாயிகள் பங்கேற்று வேளாண்மை தொடா்பாக தங்களது குறைகளைத் தெரிவித்து பயன்பெறலாம் என, ஆட்சியா் க. இளம்பகவத் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளாா்.
