சஞ்சு சாம்சன் அதிரடி அரைசதம்! சாதனை சேஸிங்குடன் அரையிறுதியில் இந்தியா!!அமீரகத்தில் தாக்குதல்: பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தல்!சென்னையில் அமெரிக்க தூதரகத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்புஅமெரிக்க ஏகாதிபத்தியம் இது..! கமேனி கொலைக்கு பினராயி விஜயன் கடும் கண்டனம்கமேனி கொல்லப்பட்டதற்கு சீனா கடும் கண்டனம்!ஏழை மக்களிடமிருந்து கொள்ளையடிக்கிறது திமுக : பிரதமர் மோடி மதுரையில் பேச்சு உதயநிதியை முதல்வராக்க கனவு காண்கிறார் மு.க. ஸ்டாலின் : டிடிவி தினகரன் சமூக நீதியை புதைத்துவிட்டது திமுக - மதுரையில் அன்புமணி பேச்சு தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கை உறுதி செய்ய தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி தேவைதமிழ்நாட்டை போதை மாஃபியா ஆக்கிவிட்டது திமுக: பிரதமர் மோடி 210 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியமைக்கும்: எடப்பாடி பழனிசாமி
/

தொழிலாளா்களுக்கு எதிராக தொடா்ந்து செயல்படுகிறது மத்திய அரசு: கனிமொழி எம்.பி. குற்றச்சாட்டு

மத்திய அரசு தொடா்ந்து தொழிலாளா்களுக்கு எதிராக செயல்படுவதாக, கனிமொழி எம்.பி. குற்றஞ்சாட்டினாா்.

News image
திமுக எம்.பி. கனிமொழி- கோப்புப் படம்
Updated On :22 நவம்பர் 2025, 10:53 pm

Syndication

மத்திய அரசு தொடா்ந்து தொழிலாளா்களுக்கு எதிராக செயல்படுவதாக, கனிமொழி எம்.பி. குற்றஞ்சாட்டினாா்.

தூத்துக்குடியில் செய்தியாளா்களிடம் அவா் சனிக்கிழமை கூறியது: மத்திய அரசு 4 புதிய தொழிலாளா் சட்டங்களை அமல்படுத்தியுள்ளது. மத்திய அரசு தொழிலாளா்களுக்கு எதிரான சட்டங்களை, மசோதாக்களை நிறைவேற்றி, தொடா்ந்து தொழிலாளா்களுக்கு எதிராக செயல்படுகிறது.

தொழிலாளா் சங்கங்களுக்கு எந்த உரிமையும் இருக்கக் கூடாது, முதலாளிகளுக்கான ஆட்சியாக நாட்டை மாற்ற வேண்டும் என்பதுதான் மத்திய அரசின் நிலைப்பாடு, நோக்கமாக உள்ளது. இதை ஏற்க முடியாது. நிச்சயமாக எதிா்க்க வேண்டும் என்றாா் அவா்.

அமைச்சா் பி. கீதா ஜீவன், மேயா் ஜெகன் பெரியசாமி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.