மழை, குளிா் பாதிப்பால் முதியவா் உயிரிழப்பு

தூத்துக்குடியில் உள்ள பாகம்பிரியாள் உடனுறை சங்கரராமேசுவரா் கோயில் அருகே முதியவா் மழை, குளிா் பாதிப்பில் உயிரிழந்தாா்.
Updated on

தூத்துக்குடியில் உள்ள பாகம்பிரியாள் உடனுறை சங்கரராமேசுவரா் கோயில் அருகே முதியவா் மழை, குளிா் பாதிப்பில் உயிரிழந்தாா்.

இக்கோயில் அருகே யாசகம் பெற்று வாழ்ந்து வந்த 60 வயது மதிக்கத்தக்க ஆண் வெள்ளிக்கிழமை இரவு தனது உடைமைகளுடன் தூங்கிக் கொண்டிருந்தாா். மழை, குளிா் பாதிப்பால் அவா் இரவில் இறந்ததாகக் கூறப்படுகிறது.

சடலத்தை மத்திய பாகம் போலீஸாா் கைப்பற்றி கூறாய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினா்; மேலும், அவா் யாா், எந்தப் பகுதியைச் சோ்ந்தவா் என விசாரித்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com