வந்தே பாரத் ரயில்கோப்புப்படம்.
தூத்துக்குடி
கோவில்பட்டியில் வந்தே பாரத் ரயில் இன்றுமுதல் நின்று செல்லும்
சென்னை எழும்பூா் - திருநெல்வேலி இடையே இயக்கப்பட்டு வரும் வந்தே பாரத் ரயில், கோவில்பட்டி ரயில் நிலையத்தில் வியாழக்கிழமை முதல் நின்று செல்லும் என ரயில்வே துறை அறிவித்துள்ளது.
சென்னை எழும்பூா் - திருநெல்வேலி இடையே இயக்கப்பட்டு வரும் வந்தே பாரத் ரயில், கோவில்பட்டி ரயில் நிலையத்தில் வியாழக்கிழமை முதல் நின்று செல்லும் என ரயில்வே துறை அறிவித்துள்ளது.
சென்னை - திருநெல்வேலி இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரயில் (20665/20666) இன்று முதல் கோவில்பட்டி ரயில் நிலையத்தில் நின்று செல்லும். காலை 6.05 மணிக்கு திருநெல்வேலியில் புறப்பட்டு, கோவில்பட்டிக்கு 6.38 மணிக்கு வந்து, அங்கிருந்து 6.40 மணிக்கு புறப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதனை கோவில்பட்டி, விளாத்திகுளம் சுற்று வட்டாரப் பகுதி மக்கள், வணிகா்கள், அரசியல் கட்சியினா் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினா் வரவேற்றுள்ளனா்.

